தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களது குற்றப்பட்டியல், சொத்துப் பட்டியல் மற்ற தகவல்கள் ஆகியவை வெளியிடப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது பற்றியும், மற்ற பல உபயோகமான சுட்டிகளையும் கொடுத்திருக்கிறார் ஹரி - இது புதிய வலைப்பதிவு.
வேட்பாளர் ஜாதகம் உங்கள் கையில்: பகுதி ஒன்று | இரண்டு | மூன்று
போன வாரம் அ.கி.வெங்கடசுப்ரமணியனது பேச்சுக்குப் போயிருந்தேன். இந்திய ஆட்சிப் பணியில் (IAS) இருந்து ஓய்வு பெற்று, இப்பொழுது வாக்காளர் விழிப்புணர்வு இயக்கம் என்னும் அமைப்பை நடத்தி வருகிறார். அவரது பேச்சின் ஒரு சில கருத்துகளை தீம்தரிகிட இதழில் ஞாநி சங்கரன் ஏற்கனவே எழுதி விட்டார். அதன் பதிவு இந்த வாரத் திண்ணையிலும் வந்துள்ளது.
என் கட்டுரை இன்றைய இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் முடிந்தபின்னர்.
பாலையில் முளைத்தல்
2 days ago

No comments:
Post a Comment