Saturday, March 20, 2004

பாராளுமன்ற உறுப்பினர்களின் வேலை என்ன?

நான் சென்னையில் உள்ள பாராளுமன்றத் தொகுதிகளில் யாருக்கு வாக்களிப்பது என்ற எனது முதல்கட்ட எண்ணங்களை எழுதியிருந்தேன். இந்த வேட்பாளர்களைப் பற்றி இன்னமும் செய்திகள் சேகரிக்க வேண்டும். முக்கியமாக TR பாலு, C குப்புசாமி ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களாக, அமைச்சராக என்ன செய்தனர் என்பது தெரிய வேண்டும். பதர் சையீது, பாலகங்கா, தயாநிதி மாறன், சுகுமாரன் நம்பியார் போன்றவர்கள் பற்றி அதிக விவரங்கள் இன்னமும் அறிந்து கொள்ள வேண்டும்.

சுற்று வட்டாரத்தில் கேட்டதில் பாலகங்காதான் 'dubious background'இல் வருகிறார். லோக்கல் கட்டப் பஞ்சாயத்து ஆசாமி போலத் தெரிகிறது. பதர் சையீது பற்றி பல நல்ல விஷயங்கள் கேள்விப்படுகிறேன்.

ஹரி என் முதல் பதிவிற்கு பதிலாக தன் தொகுதி பற்றி எழுதியுள்ளார்.

இதில் ஒரு விஷயம் பற்றி மட்டும் இங்கு எழுதுகிறேன். பாராளுமன்ற உறுப்பினர்களைப் பொறுத்தவரை தொகுதி மேம்பாடு (சாலைகள் போடுதல், கழிவுநீர் வடிகால், மேம்பாலங்கள் போன்றவை) முக்கிய விஷயமில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. அதெல்லாம் சட்டமன்ற உறுப்பினர்கள்/உள்ளாட்சி உறுப்பினர்கள் வேலை என்றே நினைக்கிறேன்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் பரந்த நாட்டுப் பிரச்சினைகளைப் பற்றி சட்டம் இயற்றுவதும், நிதிநிலை அறிக்கையினை குடைந்து நிதி அமைச்சர் சரியான திட்டங்களைக் கொண்டு வருகிறாரா என்று பார்ப்பதும், உலக நாடுகளின் தரத்தில் இந்தியா முன்னேறுவது எப்படி என்பதிலுமே கவனத்தைச் செலுத்த வேண்டும். எனக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள தொகுதி மேம்பாட்டு நிதி மீது உடன்பாடு கிடையாது.

No comments:

Post a Comment