Sunday, March 28, 2004

தேர்தல்: அன்றும், இன்றும்

காமராஜ் பேச எழுந்தார். நல்ல உயரம். கறுப்பு நிறம். கண்களில் இனந்தெரியாத பிரகாசம். முழங்கால் வரை நீண்ட ராஜலட்சணமான கைகள். கிராமியப் பேச்சு. 'ஸ்தாபன காங்கிரசுக்கு வோட்டுப் போடுங்கள்' என்று அவர் ஒருபோதும் கேட்கவில்லை. 'இந்தக் கட்சியின் அறிக்கை, இவற்றையெல்லாம் வாக்குறுதியாகத் தருகிறது. எதிர்க்கட்சிகளும் வேறு சிலவற்றைச் சொல்கின்றன. மக்கள் சீர்தூக்கிப் பார்த்து, தங்களுக்கு நல்ல கட்சி என்று தோன்றும் கட்சிக்கு மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும்.' இப்படிப் பேசிவிட்டுப் புறப்பட்டார்.

அடுக்குமொழி இல்லை. ஆரவாரம் இல்லை. நகைச்சுவை இல்லை. இலக்கணத் தமிழைக்கூட அவர் பயன்படுத்தவில்லை. ஆனால் நெஞ்சைத் தொடும் பனியன்களைத் தயாரிக்கும் திருப்பூர் நகர மக்கள் அனைவரின் நெஞ்சைத் தொட்ட பேச்சு அது. காரணம் அவர் பேச்சில் சத்தியம் இருந்தது. நான் உங்களில் ஒருவன் என்கிற தொனி இருந்தது. உதட்டிலிருந்து பேசாமல் மனத்திலிருந்து பேசினார் அவர்.
பக்: 72, சுவடுகள், திருப்பூர் கிருஷ்ணன், திருப்பூர் குமரன் பதிப்பகம், 2003, பக் 184, ரூ. 200

சோனியாவுக்கு தேச பக்திதான் இல்லை. பதி பக்தியாவது இருக்க வேண்டாமா? தன் கணவரின் கொலைக்குக் காரணமாயிருந்தவர்களை ஆதரித்தவர்களுடன் கூட்டு சேர்கிறாரே?
ஜெயலலிதா, தேர்தல் கூட்டம், circa மார்ச் 2004

No comments:

Post a Comment