Tuesday, April 19, 2005

ஆனந்தரங்கப் பிள்ளை பதிவு பற்றி

சில நாள்களுக்கு முன்னர் ஆனந்தரங்கப் பிள்ளை விரிவான நாட்குறிப்புகள் பற்றி நான் ஒரு பதிவை எழுதியிருந்தேன். அது கோபாலகிருஷ்ணன் அல்லயான்ஸ் பிரான்சேஸில் கொடுத்த ஒரு பேச்சைக் கேட்டதிலிருந்தும், அவர் எழுதிய இரண்டு புத்தகங்களைப் பார்த்ததிலிருந்தும் நினைவில் வைத்து எழுதியது.

நான் எழுதிய பதிவில் சில தவறுகள் இருந்ததை கோபாலகிருஷ்ணன் சுட்டிக்காட்டியிருக்கிறார். அவர் எனக்கு அனுப்பிய அஞ்சலிலிருந்து தேவையான பகுதிகளை இங்கு சேர்க்கிறேன். இது பிற்காலத்தில் இந்தப் பதிவைப் படிப்பவர்களுக்கு வசதியாக இருக்கும்.

====
You have rightly pointed out that I saw the manuscripts in Paris, on which I worked thoroughly by comparing pagewise the three: those manuscripts, the english translation and the tamizh edition. In order to enhance your presentation so as to render it errorless and make it a reference text, I will suggest you few modifications taking in account the following considerations/remarks:

1/ The copies were separately made by Gallois-Montbrun and by Edouard Ariel. While Gallois-Montbrun's was in Pondicherry until the end of 19th cent., the one made by E.Ariel has been brought to Paris after HIS demise in 1854, at the age of 36. Gallois-Montbrun's (who continued to live in Pondicherry as his children afterwards) copy of Pondicherry has been viewed by the British who made a copy - probably of selected passages - which has been used for translation purpose as english edition. That copy is probably kept in the State Archives of Tamizhnadu, but, for administrative reasons - not existing so tightly in Europe - and in spite of my explanations and insistance, I was unable to see it and ascertain this assumption during my short passage at Chennai 7 years ago).

2/ கலுவா-மொம்பிரேன் திருவேங்கடப்பிள்ளை நாட்குறிப்புகள் என்று சிலவற்றை எடுத்து சேகரித்தபோது அவை ஆனந்தரங்கப் பிள்ளை டயரிகளைப் போல முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என்று கண்டுகொள்ளாமல் தூக்கிப் போட்டுவிட்டதாகவும், மேலும் திருவேங்கடப்பிள்ளை என்ற பெயரில் ஒருவர்தான் அனைத்து நாட்குறிப்புகளையும் எழுதினார் என்றே அவர்கள் அனைவரும் கருதியதாகவும்

The diaries of Tiruvengadappillai were not thought to be of less importance by the Tamizhars of Pondicherry or by Gallois-Montbrun, BUT BY THE LIBRARIANS OF PARIS when they examined the copies for cataloging in the end of 19th century.

3/ நான் கேள்விப்பட்ட வரையில் புதுச்சேரி அரசு ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்புகள் என்று எதையோ விற்பதாகத் தெரிகிறது. இது J.F.ப்ரைஸ், ரங்காச்சாரி ஆங்கில மொழியாக்கமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

The English version (12 volumes, from 1736 to 1761) has been reprinted by Asian Educational Services. And the tamizh version (9 volumes, from 1736 to 1753) has been reprinted recently by Pondicherry State Government. I consider the latter reprint as useless, except the first volume which initially has been prepared by R.Desikan who wrote the important biography of Anandarangappillai. and whose work was E-keyed optically by Dr.N.Kannan, as you rightly mention also. I worked on this biography about 12 years ago, one copy of this work being preserved in National Library of France, Paris.

2 comments:

  1. //நான் கேள்விப்பட்ட வரையில் புதுச்சேரி அரசு ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்புகள் என்று எதையோ விற்பதாகத் தெரிகிறது. இது J.F.ப்ரைஸ், ரங்காச்சாரி ஆங்கில மொழியாக்கமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
    //
    நானும் பல இடங்களில் கேட்டு பார்த்தேன்..கிடைக்கவில்லை...பிரபஞ்சனிடம் தான் விபரம் கேட்க வேண்டும்.

    ஆனந்த ரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பு பற்றி நமக்கு தெரியும். முத்து விஜய திருவேங்கடம் பிள்ளை நாட்குறிப்பு ( 1794-1796). இவர் ஆனந்த ரங்கப்பிள்ளையின் பேரர்.
    அவர் எழுதின காலம் (1794-1796)ஆங்கிலேயர்கள் புதுச்சேரியயை ஆக்கிரமித்திருந்த நேரமானதால் பிரஞ்சுகாரர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
    Author : Jeyaseela Stephen
    Publishers :
    Institute for Indo-European Studies
    Annamalai Building, 1 st Floor
    49, Selvaraju Chettiar Street
    Vaithikkupam, Pondicherry - 605 012

    விற்பனை :

    சதர்ன் புக் ஹவுஸ்
    40-ஏ நீல்ராஜ்ப்பய்யர் வீதி
    புதுச்சேரி - 605 001

    பிரஜன் புக் செல்லர்ஸ்
    45, செல்வராஜி செட்டியார் தெரு
    வைத்திக்குப்பம், புதுச்சேரி 605 012

    ReplyDelete
  2. அ.இராமதாசு
    புதுச்சேரி

    புதுச்சேரி அரசின் 'புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு நிறுவனம்' (இலாசுப்பேட்டை, புதுச்சேரி - 605010) வெளியிட்டுள்ள 'ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பு' (12 தொகுதிகள்) சரியான்வையே.

    புதுச்சேரியின் நாட்குறிப்புகள்

    தென்னிந்தியாவின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றை அறிந்துகொள்ள 18-ஆம் நூற்றாண்டுப் புதுச்சேரி நாட்குறிப்புகள் முக்கிய ஆதாரமாக விளங்குகின்றன. தென்னிந்திய வரலாற்று ஆசிரியர்கள் அந்நூற்றாண்டின் தென்னகத்து வரலாற்றை எழுதுவதற்கு அவர்களுக்குப் பெரும் துணையாக இருப்பவை அந்நாட்குறிப்புகள் ஆகும்.
    புதுச்சேரி நாட்குறிப்புகள் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலத் தென்னிந்திய வரலாறு மற்றும் இந்தியாவில் பிரஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே நடந்த சண்டைகள் மட்டுமல்லாது அக்காலச் சமூக வரலாற்றையும் நமக்குத் தெரிவிக்கின்றன. எனவே, அவைகளை வரலாற்று நூல்களாகவும் கொள்ளலாம். அதுவரை, வரலாறு அரசர்களைப் பற்றி மட்டும் எழுதப்பட்டுவந்த நிலையில் மக்களின் வாழ்க்கை நிலையைப் படம்பிடித்துக் காட்டும் அந்நாட்குறிப்புகள் புதுமையாகக் காணப்படுகின்றன.
    அதுமட்டுமல்லாமல், தமிழ் எழுத்துலகின் ஓர் இலக்கிய வகையான உரைநடைக்கும் அந்த நாட்குறிப்புகள் அழகு சேர்க்கின்றன. அவை, பேச்சுத் தமிழில் எழுதப்பட்ட முதல் உரைநடை என்ற பெருமைக்கும் உரியன.
    கிடைத்துள்ள நாட்குறிப்புகள்
    புதுச்சேரியில் கீழ்க்கண்ட நான்கு நாட்குறிப்புகள் கிடைக்கப்பெற்றுப் பதிப்பிக்கப்பட்டுள்ளன:
    1. ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பு - 1736 - 1760 : 24 ஆண்டுகள் 2. ரங்கப்ப திருவேங்கடம் பிள்ளை நாட்குறிப்பு - 1760 - 1766 : 6 " 3. வீராநாய்க்கர் நாட்குறிப்பு - 1778 - 1792 : 14 " 4. முத்து விஜய திருவேங்கடம் பிள்ளை நாட்குறிப்பு - 1794 - 1796 : 2 "
    நாட்குறிப்புகளின் ஆசிரியர்கள்
    நான்கு நாட்குறிப்புகளின் ஆசிரியர்களுள் மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ரங்கப்ப திருவேங்கடம் பிள்ளை ஆனந்தரங்கப்பிள்ளையின் தம்பி மகன். முத்து விஜய திருவேங்கடம் ரங்கப்ப திருவேங்கடம் பிள்ளையின் மகன்.
    வீராநாய்க்கர் 1755-ஆம் ஆண்டு வாக்கில் பிறந்தார். அவரது கொள்ளுப் பாட்டனார் பெருமாள் நாய்க்கர், பாட்டனார் வீராநாய்க்கர், தந்தை ராசகோபால் நாய்க்கர் ஆகிய மூவரும் புதுச்சேரியில் ‘இரண்டாம் நயினார்’ என்ற பதவியில் 1720-ஆம் ஆண்டுக்கு முன்பிருந்து 1793-ஆம் ஆண்டுவரை, ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு காலம் ஒருவருக்குப் பின் ஒருவராகப் பணிபுரிந்துள்ளனர் (‘இரண்டாம் நயினார்’ என்பவர் தமிழ் மக்களுக்கான நீதி மன்றக் காவல் துறையின் துணைத் தலைவர்.) நாட்குறிப்பு ஆசிரியரின் பாட்டனார் பெயரும் வீராநாய்க்கர் என்பதால் அவர் இரண்டாம் வீராநாய்க்கர் என்று அழைக்கப்படுகிறார்.
    நாட்குறிப்புகளின் பதிப்புகள்
    ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பை ‘பிரடெரிக் ப்ரைஸ்’ (Frederick Price) என்பவர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து, அது ஆங்கில அரசால் மதராசில் வெளியிடப்பட்டது. முதல் மூன்று தொகுதிகள் 1904 முதல் 1914-ஆம் வரையிலான ஆண்டுகளில் வெளியாயின. எஞ்சிய 9 தொகுதிகளின் ஆங்கிலப் பதிப்பை ‘டாட்வெல்’ (Dodwell) என்பவர் 1916-லிருந்து 1928 வரை பதிப்பித்தார்.
    முதல் தமிழ்ப்பதிப்பின் முதல் தொகுதி பிரஞ்சு ஆட்சியாளர்களால் 1948-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. மொத்தம் எட்டுத் தொகுதிகள் வெளியாயின. எட்டாம் தொகுதி 1986-இல் வெளிவந்தது. 2006-ஆம் ஆண்டில், எஞ்சிய நான்கு தொகுதிகளோடு பன்னிரண்டு தொகுதிகளும் புதுச்சேரி அரசால் பதிப்பிக்கப்பட்டன.
    ரங்கப்ப திருவேங்கடம் பிள்ளையின் நாட்குறிப்பு ஜெயசீல ஸ்டீபன் என்னும் அறிஞரை தொகுப்பாசிரியராகக் கொண்டு இரு தொகுதிகளாகப் புதுச்சேரி அரசால் 2000-ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்டது.
    இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பினை ஓர்சே மா. கோபாலகிஷ்ணன் என்னும் அறிஞர் 1992-ஆம் ஆண்டில் பதிப்பித்தார்.
    முத்து விஜய திருவேங்கடம் பிள்ளை நாட்குறிப்பு ஜெயசீல ஸ்டீபனால் 1999-ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்டது.
    கிடைக்குமிடம்
    ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பின் 12 தொகுதிகளும் ரங்கப்ப திருவேங்கடம்- பிள்ளை நாட்குறிப்பின் 2 தொகுதிகளும் இலாசுப்பேட்டையிலுள்ள புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் விலைக்குக் கிடைக்கின்றன.
    முத்து விஜய திருவேங்கடம் பிள்ளை நாட்குறிப்பு தற்போது கிடைக்கவில்லை.
    இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பினை கீழ்கண்ட இணைய இணைப்பிலிருந்து பி.டி.எஃப். கோப்பாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம்: tamildigitalibrary.in

    ReplyDelete