ஏர் இந்தியா விமானப் பணிப்பெண்களின் உச்ச வயது வரம்பு 50 என்று ஏர் இந்தியா நிர்வாகம் முடிவு செய்திருந்தது. ஆண் பணியாளர்கள் 58 வயது வரை வேலை செய்யலாம் என்றும் இருந்தது. இதனை எதிர்த்து ஏர் இந்தியாவின் பெண் ஊழியர்கள் வழக்கு தொடுத்து மும்பை உயர்நீதி மன்றத்தில் வென்றனர். விடாது ஏர் இந்தியா நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வென்றது. இதைப் பற்றி திண்ணையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதன் வலைப்பதிவு இங்கே.
இப்பொழுது விமானப் போக்குவரத்து அமைச்சகம் பணிப்பெண்கள் 58 வயது வரை வேலை செய்யலாம் என்று ஏர் இந்தியாவிற்கு உத்தரவு இட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இடைப்பட்ட காலத்தில் வேலையிலிருந்து (50 வயதில்) ஓய்வு பெற்ற பெண்களையும் மீண்டும் வேலைக்கு சேர்த்துக் கொள்ளவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.
ஏதோ, நாள் கடந்தாலும் நீதி நிலைநாட்டப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கக் கூடியது. அதுவும் இந்த நீதி, உச்ச நீதிமன்றத்தாலேயே கைவிடப்பட்ட பின்னர் அரசாங்கத்தால் அளிக்கப்பட்டிருப்பது இன்னமும் மகிழ்ச்சியளிக்கக் கூடியது.
Manasa Book Club, Chennai.
17 hours ago

No comments:
Post a Comment