இதுதான் தற்பொழுது மத்திய அரசின் "சுய-தம்பட்ட" விளம்பரங்களுக்குப் பெயர். "India Shining!" என்று ஆங்கிலத்தில் பெயரிட்டு, ஒவ்வொரு மொழியிலும் மாற்றப்பட்டு, தமிழில் மேற்கண்ட பெயரில் வெளிவருகிறது. வானொலியில், செய்தித்தாள்களில் எங்கும் ஒரு சிரிக்கும் பஞ்சாபி விவசாயி, பொங்கும் மலர்ச்சியுடன் ராஜஸ்தானத்துப் பெண், கையில் செல்பேசியுடன் ஒரு தொழில்முனைவர் என்று 'ஒளிமிகுந்த பாரதத்தின்' மக்கள் காட்டப்படுகின்றனர்.
இவையெல்லாம் தற்போதைய மத்திய அரசின் சாதனைகளாகக் காண்பிக்கப்படுகின்றன. இந்த விளம்பரங்கள் அனைத்தையும் பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வருமுன்னர் செய்து விட வேண்டும் என்று இறக்கை கட்டிக்கொண்டு செயல்படுகிறது அரசு இயந்திரம். ஒவ்வொரு மலர்ந்த முகத்தைக் காண்பிக்கும் போதும் அதற்கு இணையாக பசித்து, ஒட்டிய வயிரையும், வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்க்கை முழுவதையும் கழிக்கும் சுருக்கம் விழுந்த முகத்தையும், கோடிக் கணக்கான ஊழல்களையும், மதக்கலவரங்களையும், நக்சல்கள் உருவாகக் காரணமான வறட்சியையும் காண்பிக்கலாம்.
இந்த 'ஒளிரும் இந்தியா' யாரை மயக்குவதற்கு? நிச்சயமாக தற்போதைய அரசின் காலத்தில் பல வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளன. அதற்காக அரசின், மக்களின் வரிப்பணத்தை இப்படியா விரயம் செய்வது? அந்தப் பணத்தில் எத்தனை பேருக்கு சோறூட்டலாம்? இன்னமும் எத்தனை வளர்ச்சிப் பணிகளுக்குப் பணம் கொடுக்கலாம்?
Manasa Book Club, Chennai.
3 hours ago

No comments:
Post a Comment