பாகிஸ்தான் அதிபர் பெர்வீஸ் முஷாரஃப் மீது கடந்த 11 நாட்களில் இரண்டாவது முறையாக கொலைமுயற்சி நடந்துள்ளது. இரண்டாவது தடவையும் முஷாரஃப் தப்பித்துள்ளார். முதல் முறையை விட இரண்டாவது முறை கொலைகாரர்கள் மிக அருகில் நெருங்கியுள்ளனர். முதல்முறை பாலத்தில் அடியில் வைத்திருந்த வெடிகுண்டு வெடிக்காததால் தப்பித்துள்ளார். இரண்டாவது முறை தற்கொலைப்படையினர் முஷாரஃப்பின் கார் மீது இரண்டு வெடிமருந்துகள் நிரம்பிய கார்களைக் கொண்டு மோத வந்துள்ளனர். ஆனால் என்ன நடந்தது என்று சரியாகத் தெரியவில்லை, முஷாரஃப்பின் காரின் கண்ணாடி மீது வெடித்துச் சிதறிய பொருட்கள் விழுந்துள்ளன. முஷாரஃப்பிற்குக் காயம் ஏதும் படவில்லை.
பா.ராகவன் இது நிஜமா, நாடகமா என்று சந்தேகப்பட்டு விளக்கமாக ஆராய்ந்துள்ளார். [ஏற்கனவே தெரியாதவர்களுக்கு: பா.ராகவன் கதையெழுத்தாளர் மட்டுமல்ல, தீவிர உலக அரசியல் விமரிசகரும் கூட. குமுதம் ரிப்போர்டரில் இவரது 'டாலர் தேசம்' என்னும் அமெரிக்கா பற்றிய தொடர் கட்டுரைகள் கடந்த 64 இதழ்களாக வந்துகொண்டிருக்கிறன. பாகிஸ்தான் பற்றி நிறைய எழுதியுள்ளார். சதாம் ஹுஸேன் பிடிபட்டபோது அதைப்பற்றிய இவரது விரிவான கட்டுரைகள் குமுதம் ரிப்போர்டரில் வெளியாகியுள்ளன.]
எனக்கு முதல் கொலைமுயற்சி நாடகம் போல் தோன்றினாலும், இரண்டாவதில் உள்ள தீவிரம் இது நிஜமாக இருக்கலாமோ என்று நம்பும்படியுள்ளது. இன்னமும் விவரங்கள் தேவை.
The Outsider 8: உடல் நலம் பேணுவது எப்படி?
2 days ago

No comments:
Post a Comment