இது மாநில, மத்திய அரசுகள் டென்னிஸ் ஆடுவது போல ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லி முழுப்பக்க விளம்பரம் செய்யும் நேரம். சத்யேந்திர துபே கொலை பற்றி கடைசியாக மத்திய தரைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரகம் ஒரு விளம்பரம் மூலம் தன் நிலையை விளக்கியது. அதில் பீஹார் மாநில அரசை இந்தக் கொலைக்கு முழுப் பொறுப்பாளி என்றது. இதற்கு பதிலாக பீஹார் மாநில அரசு தன் நிலையை விளக்கி ஒரு முழுப்பக்க விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
சாரம்:
* தங்க நாற்கோணத் திட்டத்திற்கு, பீஹார் மாநில அரசு, எங்கெங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் பாதுகாப்பு அளித்து வருகிறது.
* துபே தனது கடிதம் எதிலும் பீஹார் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய் விட்டதென்று குற்றம் சாட்டவேயில்லை.
* துபேயின் குற்றச்சாட்டு அனைத்துமே தேசிய நெடுஞ்சாலைகள் வாரியத்தில் ஒப்பந்தம் வழங்குவதில் ஊழல் மலிந்திருக்கிறது என்பதுதான். இதில் முழுப்பங்கு மத்திய அரசிடம் மட்டுமே. பீஹாரின் சட்டம் ஒழுங்கைக் குறை கூருவது ஏன்?
* துபேயுடன் கூடப் படித்த ஐஐடி மாணவர்தான் கயாவின் காவல்துறை ஆணையராக உள்ளார். துபே அவரைப் பலமுறை சந்தித்துள்ளார். ஒருமுறை கூடத் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று சொன்னதில்லை.
ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சுமத்தினாலும், மக்களிடம் தங்களது நிலையை விளக்க வேண்டும் என்ற இருவரது எண்ணமும் அந்த அளவில் வரவேற்கத் தக்கதே.
இனி அடுத்து என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
Thursday, December 18, 2003
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment