நேற்றைய செய்தியாக சாரு நிவேதிதாவின் மார்தட்டல் ("இந்திய மொழிகளிலேயே முதன் முதல் மின்-நாவல் என்னதுதான்!") பற்றிய உண்மையின்மையைப் பார்த்தோம். விருப்பம் இருப்பவர்கள் சாருவின் கோணல் பக்கங்கள் தளத்தில் அவரது மின்புத்தக முயற்சியைப் பற்றியும், அதில் அவர் பட்ட தொல்லைகளையும், ஒரு கூட்டமே அவருக்கு உதவியதையும் பற்றி எழுதியுள்ளார். அப்படி உழைத்தவர்களைக் கொச்சைப் படுத்துவது என் நோக்கமில்லை. ஆனால் இந்த "முதலாவது" என்கிற பீலா வேண்டாமே? மேலும் PDF கோப்பு ஆக்க இவ்வளவு கஷ்டப்பட வேண்டாம். ஓப்பன் ஆஃபீஸ் என்றொரு மென்பொருள் - இலவசமாகக் கிடைக்கிறது. அதில் ஒழுங்காக TSCII அல்லது யூனிகோடு எழுத்துரு கொண்டு அடித்து, சேமிக்கும் போது PDF ஆக சேமிக்கலாம். சாருவுக்கு உதவி செய்ததாகக் குறிப்பிடப்பட்ட பெங்களூர் அரவிந்தனுக்கு நானே ஓப்பன் ஆஃபீஸ் மென்பொருளைக் கொடுத்திருக்கிறேன். மேலும் தமிழில் சொற்பிழை களைய, ஒற்றுப்பிழை களைய மென்பொருள்கள் உள்ளன. அதனால் திரு சாரு நிவேதிதா ஒன்றும் இல்லாததை ஊதிப் பெரிது பண்ண வேண்டாமே?
பல விவரங்களுடன் வெங்கட் தனது வலைப்பதிவில் இப்பொழுது இருக்கும் எவையுமே நியாயமாக மின்புத்தகங்கள் என்ற அடைமொழியினைத் தாங்கி வர முடியாதது என்கிறார். வெறும் PDF கோப்புகளோ, HTML கோப்புகளோ (கடவுச்சொல்லுடனோ, இல்லாமலோ) மின்புத்தகங்கள் ஆகிவிட முடியாதென்கிறார். ஓப்பன் ஈபுக் தளத்தில் ஒரு மின்புத்தகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு வரைமுறையினைக் கொடுத்துள்ளார்கள்.
ஆலயம்
1 day ago
No comments:
Post a Comment