ஜெயலலிதா மீது பத்து வழக்குகள் தொடரப்பட்டது. அந்த முழுப் பட்டியலும் இங்கே. அதில் இரண்டு வழக்குகள் டான்ஸி நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள். இவை கடைசியாக உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.
இப்பொழுது ஸ்பிக் பங்கு ஊழல் பற்றிய வழக்கு சிபிஐ விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் உள்ளது. ஜெயலலிதா நேற்று நீதிமன்றத்தில் சாட்சி அளித்தார். முழு விவரம் தினமலரில்.
இதற்கிடையில் "வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிப்பு வழக்கு" தமிழ்நாட்டிற்கு வெளியே நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, கர்நாடகாவுக்கு மாற்றச் சொன்னது. ஜெயலலிதா கர்நாடக மக்கள் தனக்கு எதிரானவர்கள் (காவிரிப் பிரச்சினையை முன்வைத்து), அதனால் வழக்கை பாண்டிச்சேரிக்கு மாற்ற வேண்டும் என்று முறையீடு செய்தார். பின்னர் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் வேறு எந்த மாநிலமாக (கேரளா, ஆந்திரா...) இருந்தாலும் பரவாயில்லை என்று கேட்டுக்கொள்ள, அவர்களது மனுவை மாற்றி அனுப்ப உச்ச நீதிமன்றம் அனுமதித்து உள்ளது. மேலும் உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசிடம் ஜெயலலிதாவின் முறையீட்டின் மேலான அவர்களது பதிலை அனுப்பக் கோரியுள்ளது.
நீதி வழங்கப்படுவதுடன், நீதி வழங்கப்பட்டது போன்ற தோற்றமும் இருக்க வேண்டும். எனவே, உச்ச நீதிமன்றம், இந்த சொத்துக் குவிப்பு வழக்கை கேரளாவுக்கு (பாண்டிச்சேரி கூடாது!) மாற்ற வேண்டும். நேரத்தை விரயமாக்கக் கூடாது.
Friday, December 19, 2003
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment