Saturday, January 17, 2004

பத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 4

வீரேந்திர குமார்
INS தலைவர் வீரேந்திர குமார் பேசுகையில் சட்டமன்றங்கள் தண்டிக்கப்படுபவருக்கு மேல்முறையீடு உரிமை கூடத் தராதவகையில் நடந்து கொள்கின்றன என்று குற்றம் சாட்டினார். சட்டமன்றங்கள், பாராளுமன்றம் ஆகிய இடங்களில் என்ன பேசப்பட்டாலும், அதனை முழுதாக அச்சிட உரிமை வேண்டும் என்றார். (அதாவது அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுதல் என்னும் உரிமையே இருக்கக்கூடாது என்றார்.) மிகவும் ஆவேசமாக, உணர்வுபூர்வமாகப் பேசினார்.

அரசியல்வாதிகள் வாய்ப்பு கிடைத்தால் மிசா போன்ற எமர்ஜென்சி சமயத்தில் பயன்படுத்திய சட்டங்கள், ஒப்பொழுது நடைமுறையில் உள்ள போடா போன்ற சட்டங்கள் (பொடாவை ஆதரித்த வைகோ இன்று அதன்மூலமே சிறையில் இருப்பதைக் குத்திக்காட்டினார்) போல பத்திரிகைகளை அடக்க ஏதேனும் வழி கிடைக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்றார். அரசியல்வாதிகள் பதவி கிடைத்ததும் தங்களைச் சுற்றி SPG வீரர்களை வைத்துக் கொண்டு, தங்களுக்கு பெருமதிப்பு வந்துவிட்டது போல நடந்துகொள்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் என்றால், பொதுச்சட்டத்தை எப்படி களங்கப்படுத்துவது என்பதே தங்கள் பணி என்பதுபோலச் செயல்படுகிறார்கள். ஒரு சாதாரணக் குடிமகன் நடுத்தெருவில் சிறுநீர் கழித்தால் அவார் உடனடியாகக் கைதுசெய்யப்படுவார். ஆனால் ஒரு சட்டமன்ற, பாராளுமன்ர உறுப்பினர் இதைச் செய்தால் அவரைக் கைது செய்யமுடியாது என்றார்.

சட்டமன்றங்களுக்கு தண்டனை தரும் அதிகாரமே இருக்கக்கூடாது என்றார். உரிமை மீறல் என்று குற்றம் சாட்டி, நாளை சட்டமன்றம் இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கினால் என்ன் ஆவாது என்று கேள்வி எழுப்பினார். பின்னர் நீதிபதி தாமஸ் ஒரு கேள்விக்குப் பதில் தருகையில் இதனைக் குறிப்பிட்டு, இந்தக் கேள்வி தன்னை வெகுவாகப் பாதித்தது என்றும், இப்பொழுதுள்ள நிலைமையில் ஒரு சட்டமன்றம் வெளியாள் ஒருவருக்கு ஏதோ காரணம் காட்டி ஆயுள் தண்டனை கொடுத்தால் நீதிமன்றங்களால் எந்த சட்டத்தை முற்படுத்தி பாதிக்கப்பட்டவரின் வழக்கை ஏற்றுக் கொள்ள முடியும் என்று தெரியவில்லை என்றார். நீதிமன்றங்கள் இதுவரை சட்டமன்றங்கள் வரைந்துள்ள சட்டங்களின் உள்ளாகவே நீதியை வழங்க முடியும். சட்டமன்றங்களும், பாராளுமன்றமும் தங்கள் உரிமைகளை உடனடியாக வரைடறுக்காவிட்டால் குழப்பமே மிஞ்சும் என்றார்.

வீரேந்திர குமார் மேலும் பேசுகையில் தமிழக சட்டமன்றம் 'supremacy and majesticity" என்றெல்லாம் பேசுகிறதே? ஆனால் எப்பொழுது அந்த மன்றத்தின் அவைத்தலைவர் முதலமைச்சர் காலில் விழுந்து வணங்குகிறாரோ, அப்பொழுதே அந்த சட்டமன்றத்தின் supremacyக்குக் களங்கம் ஏற்பட்டுவிட்டது; majesticityக்குக் களங்கம் ஏற்பட்டுவிட்டது என்றார்.

INS சட்டமன்ற உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் ஆகிய பிரச்சினைகளை எடுத்துக் கொண்டு நாடு முழுவதும் செல்லும் என்றார்.

No comments:

Post a Comment