Wednesday, January 21, 2004

ராஹுல் திராவிட் மீது குற்றச்சாட்டு, அபராதம்

நேற்று நடந்த இந்தியா-ஸிம்பாப்வே ஒருநாள் போட்டியில் ராஹுல் திராவிட் பந்தின் நிலையை செயற்கைப்பொருட்களால் மாற்ற முயன்றார் என்ற குற்றச்சாட்டினை மூன்றாவது நடுவர் பீட்டர் பார்க்கர் வைத்தார். நேற்று தொலைக்காட்சியில் பார்க்கும்போது திராவிட் பந்தின் மேல் மஞ்சளான ஒரு பொருளால் தேய்ப்பது தெரிய வந்தது. தன் வாயில் மென்று கொண்டிருந்த ஏதோ ஒரு 'சூயிங் கம்' கலந்த எச்சிலால் பந்தைத் தேய்த்திருக்கிறார்.

ரெஃபெரீ கிளைவ் லாய்ட், திராவிடின் நேற்றைய ஆட்டத்துக்கான வருமானத்தில் 50%ஐ அபராதமாக விதித்திருக்கிறார். திராவிட் போன்ற ஆட்டக்காரர்கள் பல வருடங்களாக கிரிக்கெட் விளையாடுகின்றனர். எது சரி, தவறு என்றெல்லாம் இவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், இது வேண்டுமென்றே செய்தது; இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு, விதிகளுக்குப் புறம்பாக, வாய்ப்புகளை அதிகரிக்க வைக்கவேண்டும் என்று செய்யப்பட்டது என்று தோன்றவில்லை.

No comments:

Post a Comment