நேற்று வாஜ்பாய், திமுக-காங்கிரஸ் கூட்டணி கொள்கைகளற்ற, சந்தர்ப்பவாதக் கூட்டணி என்று பேசியுள்ளார். என்னவோ, பாஜக மட்டும் கொள்கைகளோடுதான் கூட்டணி அமைப்பது போல இருக்கிறது இந்த கேலிப்பேச்சு. அதாவது, ஒரு காலத்தில் காங்கிரஸ், 'திமுக ராஜீவ் கொலைக்குக் காரணம்' என்று சொன்னார்களாம். இப்பொழுது அதை மறந்து விட்டு, கூட்டணி அமைக்கிறார்கள் என்கிறார்.
திமுக ராஜீவ் கொலைக்குக் காரணமாயிருந்தால், பாஜகவும் அவர்களோடு கூட்டணி அமைத்திருக்கக் கூடாது அல்லவா? அப்படி திமுக, ராஜீவின் கொலைக்குக் காரணமில்லை என்றால், காங்கிரஸ் தன் கூற்றின் தவறை உணர்ந்து, பழசை மறந்துவிட்டு திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வதில் தவறில்லைதானே?
அஜித் ஜோகி, திலிப் சிங் ஜுதேவ் ஊழல்கள் பற்றி கண்ணீர் மல்கப் பேசிய வாஜ்பாய் இப்பொழுது தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்?
அழகும் ஆடம்பரமும்
3 hours ago
No comments:
Post a Comment