பிரதமர் வாஜ்பாயியின் தங்கையின் பேரன் மனீஷ் மிஸ்ரா ஓடும் இரயிலிருந்து ஒருசில பொறுக்கிகளால் தூக்கியெறியப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தப் பொறுக்கிகள் இரயில் வண்டியில் உள்ள சில பெண்களை வம்புக்கு இழுத்துக் கொண்டிருந்தனராம். மிஸ்ராவும் அவரது நண்பர்களும் இதைத் தடுக்க முனைந்துள்ளனர். இதனால் கோபம் கொண்ட, குடிவெறியில் இருந்த, பொறுக்கிகள் மிஸ்ராவையும், அவரது நண்பர்களையும் பிடித்திழுத்து இரயில் பெட்டியிலிருந்து வெளியே தூக்கி எறிந்துள்ளனர். அதில் மிஸ்ரா இறந்துபோயுள்ளார். அவரது நண்பர்கள் பிழைத்தனரா என்று தெரியவில்லை.
அதாவது, இன்றைய நிலையில், நாட்டில் அனைவர் மீதும் - உயர்வு தாழ்வின்றி - கொலைத்தாக்குதல் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று புரிய வருகிறது.
இது நடந்தது உத்திரப் பிரதேசத்தில்.
இரண்டு முடிவுகள்
1 day ago

No comments:
Post a Comment