Saturday, November 15, 2003

குருமூர்த்தியின் 'பெட்ரோல் - அது ஒரு பெரிய ஆயுதம்' - 1

குருமூர்த்தியின் 'பெட்ரோல் - அது ஒரு பெரிய ஆயுதம்' பற்றிய கருத்துகள்
துக்ளக் 12 நவம்பர் 2003 தேதியிட்ட இதழ், "தண்ணீர் விட்டோ வளர்த்தோம்" கட்டுரைத் தொடரின் 58ஆவது பகுதியிலிருந்து

சுருக்கம்: பெட்ரோல் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது என்று முன்னேறிய நாடுகள், முக்கியமாக அமெரிக்க வல்லரசு, எவ்வாறு அதை பெரும் அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளோடு உறவு வைத்திருக்கின்றனர் என்று எழுதுகிறார். 1970இல் எண்ணெய் வள நாடுகள் அமெரிக்காவிற்கு பெட்ரோல் தர மாட்டோம் என்று மிரட்டியதையும், அதனைத் தொடர்ந்து அமெரிக்கா எவ்வாறு சாம, தான, பேத, தண்டத்தைப் பிரயோகித்து இந்த எண்ணெய் வள நாடுகளைத் தன் கையில் போட்டு வைத்திருக்கிறது என்பதையும் விளக்குகிறார். கட்டுரையை முடிக்கும்போது இவ்வாறு சொல்கிறார்:

"பெட்ரோலுக்கு மாற்று வந்தால் அரபு நாடுகளின் செல்வம் மங்கும். அரபு நாடுகளின் செல்வம் மங்கினால் இஸ்லாமிய தீவிரவாதம், பயங்கரவாதத்திற்கு கிடைக்கும் உந்துதல் குறையும். ஆக, இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு இறுதியான முடிவு பெட்ரோலுக்கு இருக்கும் பண, அரசியல், மத சம்பந்தப்பட்ட அதிகார பலம் குறைவதுதான். இப்படி போகிறது அமெரிக்காவின் சிந்தனை. இந்த முயற்சியில்யௌலக நாடுகள் பெரும்பாலும் அமெரிக்காவின் பக்கம் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது."

மேலும், இந்தக் காரணத்தினால்தான் அமெரிக்கா "பெட்ரோலுக்கு மாற்றாக ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் (Hydrogen fuel cells) மற்றும் சோலார் எரிபொருள் செல்கள் (Solar fuel cells), தவிர bio-fuel என்கிற இயற்கை தாவர எரிபொருள்கள் மிக தீவிரமாகவும் விரைவாகவும், மலிவாகவும், வேண்டிய அளவிலும் கிடைக்க ஆய்வுகள், பரிசோதனைகள், முயற்சிகள்" ஆகியவற்றை பல கோடி ரூபாய்கள் செலவில் நடத்தி வருகிறது என்றும் சொல்கிறார்.

கடைசியாக இஸ்லாமிய அரபு நாடுகளுக்கு அறிவுரையும் கூறுகிறார்:

"இந்த [மேற்கூறிய பெட்ரோலுக்கு இணையான மாறுபட்ட எரிபொருள்களுக்கான] முயற்சிக்கு இப்போதுள்ள முக்கிய உந்துதல், இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்கிற எண்ணம்தான். இதை இஸ்லாமிய நாடுகளும், அந்த மதத் தலைவர்களும், முஸ்லிம் அறிவு ஜீவிகளும் உணர வேண்டும். இறைவன் அளித்த செல்வத்தை, பலத்தை துஷ்பிரயோகம் செய்தால், அதற்கு மாற்றை இறைவனே அளிப்பான் என்பதை அவர்கள் உணர வேண்டும். இஸ்லாமிய மதத்தின் தீவிரவாதத்தை அவர்கள் கூட்டு முயற்சியால் குறைக்க வேண்டும். மற்ற மதங்கள் பொய்யானவை, அந்த மதத்தவர்கள் காஃபீர்கள் என்கிற எண்ணத்தைக் கைவிட வேண்டும். அப்போதுதான் தீவிரவாதமும், பயங்கரவாதமும் இஸ்லாமிய மதத்திலிருந்து விலகும். அது அவர்களுக்கும் நல்லது; உலகுக்கும் நல்லது."

No comments:

Post a Comment