Sunday, November 23, 2003

கவிதைக் கணம் - கவிஞர் எஸ்.வைதீஸ்வரனுடன்

கவிதைக்கணம் எஸ்.வைதீஸ்வரன் பற்றிய நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்ட ஒரு கட்டுரை (கே.எஸ்.சுப்பிரமணியன்) இம்மாதக் கணையாழியில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்ட மற்றுமொரு கட்டுரை (பாரதிராமனுடையது) அப்பொழுதே ராயர் காபி கிளப்பில் போடப்பட்டது.

சுப்பிரமணியனுடைய கட்டுரை வாசிக்கப்பட்ட போது மிகவும் நீண்டு இருந்ததால் அலுத்துப் போனது எனக்கு - அதுவும் அப்பொழுது வைதீஸ்வரன் கவிதைகள் பற்றிய ஒரு பரிச்சயமும் இல்லாததால். ஆனால் இப்பொழுது படிக்கையில் மிகவும் நன்றாக உள்ளது (இதற்கிடையில் நானும் வைதீஸ்வரன் கவிதைத் தொகுப்பு ஒன்றை வாங்கிக் கொஞ்சம் புரட்டியும் விட்டேன் என்பதையும் சொல்லிவிட வேண்டும்).

அந்தக் கூட்டம் பற்றிய என் எண்ணங்களை இங்கே பதிவு செய்துள்ளேன்.

No comments:

Post a Comment