இன்று சன் நியூஸ் தொலைக்காட்சிக் கன்னலில் மாலன் கவிஞர் ஞானக்கூத்தனோடு உரையாடினார். கவிஞரின் பென்சில் படங்கள் கவிதைத் தொகுப்பைப் பற்றிப் பேசும் விதமாகத் தொடங்கி தமிழ்க் கவிதைகள் பற்றி, மரபு பற்றி, நீதிநூல்கள் இலக்கியமாகுமா (கநாசு...) என்ற கேள்வி பற்றி, கவிதைகளினூடே கதை சொல்லல் பற்றி, சமகாலத்திய பலமொழிக் கவிதைகளில் எம்மொழிகளில் உயர்ந்த கவிதைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன, அதில் தமிழின் இடமென்ன என்று பல தளங்களிலும் சென்றது இந்த நேர்முகம்.
முப்பது நிமிடங்கள் மிகவும் குறைவானது இதுபோன்ற சந்திப்புகளுக்கு.
இதுபோன்ற நல்ல புத்தக அறிமுக நிகழ்ச்சி மனதுக்கு நிறைவாக உள்ளது.
ஆலயங்கள் வழியே வரலாற்றை மீட்டெடுத்தல்
3 hours ago
No comments:
Post a Comment