Wednesday, November 19, 2003

ஜெயலலிதாவின் மேலுள்ள வழக்குகள்

உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவின் மீதுள்ள வழக்குகளை தமிழக நீதிமன்றங்களிலிருந்து கர்நாடகத்துக்கு மாற்றியுள்ளது. அரசுத் தரப்பு வழக்கறிஞரும் கர்நாடக அரசினால் நியமிக்கப்படுவார்.

திமுகவின் அன்பழகன் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஜெயலலிதா மற்றும் தமிழக அரசின் மீதுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானமாக ஆகியுள்ளது.

ஜெயலலிதா பெங்களூரில் அமைக்கப்படும் தனி நீதிமன்றத்துக்குச் செல்ல மறுத்தால் என்னவாகும்? ஜெயலலிதாவுக்கு மேல் முறையீடு செய்ய அனுமதி உண்டா என்று தெரியவில்லை.

No comments:

Post a Comment