Monday, November 24, 2003

முரசொலி மாறன் மறைவு

நேற்றுதான் சிதம்பரத்தின் 'கற்றறிந்த' அமைச்சர்கள் பற்றி எழுதியிருந்தேன். மாறன் அப்படிப்பட்ட கற்றறிந்த அமைச்சர்களில் ஒருவர். தமிழகத்திலிருந்து கடந்த பத்தாண்டுகளில் மத்திய அமைச்சரானவர்களில் மொத்தமாகவே இரண்டு பேரைத்தான் கற்றறிந்த அமைச்சர்கள் என்று சொல்லலாம். ரங்கராஜன் குமாரமங்கலம், மாறன்.

மாறன் முறையாக எவ்வளவு கற்றிருந்தார் என்ற தகவல் என்னிடம் இல்லை. ஆனால் உலக வர்த்தக அமைப்பில் அவர் சாதித்த அளவின் அடிப்படையில் இந்தியாவில் தலைசிறந்த அமைச்சர்களில் ஒருவராக இவர் இருந்திருக்கிறார். வணிகம் மற்றும் தொழில் அமைச்சராகப் பணியாற்றிய இவர் பொருளாதாரத்தில் லிபரல் (எழுவரல் - இராம.கி) கொள்கைகளை செயல்படுத்தினார். 1996இலிருந்து தேவ கௌடா, குஜ்ரால் அமைச்சரவைகளில், பின்னர் வாஜ்பாயி அமைச்சரவையில் முதலில் தொழில், பின்னர் வணிகம் மற்றும் தொழில் அமைச்சராக இருந்தவர். செப்டெம்பர் 2002இல் அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட குளறுபடியால் நினைவிழந்து கோமாவில் இருந்து நேற்று இறந்து போனார்.

நான் வசிக்கும் பாராளுமன்றத் தொகுதியின் (மத்திய சென்னை) உறுப்பினர் இவர். இவரது மறைவுக்கு இரங்குவோம்.

தி ஹிந்து பிசினெஸ் லைன் இரங்கல் கட்டுரை

No comments:

Post a Comment