Sunday, November 30, 2003

ஜெயேந்திரர் போட்ட தடை

கல்கி 30/11/2003 தேதியிட்ட இதழ் வாசகர் கடிதத்திலிருந்து ஒன்று:

'ஜயேந்திரர் போட்ட தடை' என்ற தலைப்பில் வந்த செய்தியைப் படித்தேன். 'ஞானபீடம்' என்ற நாடகத்தை ராணி சீதை ஹாலில் 15.9.2003 அன்று பார்த்தேன். நாடகத்தில் எந்த ஒரு மதத்தையோ, எந்த ஜாதியையோ, பற்றி தவறாகக் கூறாமல் ஹிந்து சமயத்தின் உயர்ந்த குறிக்கோள்களை எளிதில் புரியும்படியாக விளக்கப்பட்டிருந்தது. காலத்திற்கேற்ற இந்த நாடகத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு ஏன் தடை செய்ய வேண்டும் என்று புரியவில்லை. பல இடங்களில் நடத்தப்பட வேண்டிய நல்ல நாடகம். (டி.பானுமதி, சென்னை-61)

இதுபற்றிய என் முந்தைய வலைப்பதிவு

என் கேள்விகள் அதில் சொன்னது போலவே. யார் இப்படிப்பட்ட நாடகத்துக்குத் தடை போட முடியும்? ஜெயேந்திரர் சட்டத்துக்கு மீறிய மனிதரா?

ஏன் இதுபற்றி மற்ற செய்தித்தாள்களிலோ, பத்திரிக்கைகளிலோ செய்தியே வரவில்லை?

No comments:

Post a Comment