Sunday, November 16, 2003

ப.சிதம்பரம் - தேவை ஓர் அறுவை சிகிச்சை

ப.சிதம்பரம் - தேவை ஓர் அறுவை சிகிச்சை
கல்கி 16/11/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 4

போன இதழில் எப்படி அரசியல், குற்றம் புரிபவர்களினால் சீரழிக்கப்படுகிறது என்பதைப் பற்றியும், குடிமக்கள் தங்கள் வாக்குரிமையைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை என்பது பற்றியும் பேசியிருந்தார். இந்த இதழில் வாக்கு வங்கிகள் பற்றி மீண்டும் பேசுகிறார். அவரது கருத்துகள்:

* மக்கள் ஒரு கட்சிக்கு 'இது எம்.ஜி.ஆர் கட்சி, இது இந்திரா காந்தி கட்சி' என்பதனால் வாக்களிக்கிறார்கள், இன்னம் சிலர் 'இது எங்கள் சாதிக்கு/மதத்துக்கு உகந்த கட்சி' என்று வாக்களிக்கின்றனர். பொருளாதார வறுமைக்கு ஆளான பலர் 'பணம், பொருள், உணவு' ஆகியவற்றுக்காக வாக்களிக்கின்றனர்.

* பொருளாதாரப் பிரச்சினை பற்றி அரசியல் தலைவர்களுக்கு இடையே அறிவுபூர்வமான விவாதங்கள் நிகழ்வதே இல்லை. வேட்பாளர், வாக்காளர்களுக்கு இடையேயும் அறிவுபூர்வமான கருத்துப் பரிமாற்றம் இல்லை. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மற்ற பிரச்சினைகளுக்கு இடையே, பொருளாதாரப் பிரச்சினை பற்றியும் தீவிரமான விவாதங்கள் நடைபெறுகின்றன.

* தேர்தலுக்குத் தேர்தல் நம்முடைய நாடாளுமன்றத்தின், சட்டமன்றங்களின் தரம் குறைந்து கொண்டே வருகிறது.

* இதிலிருந்து எப்படி மீள்வது? ஐந்து வழிமுறைகளைக் குறிப்பிடுகிறார்:

  1. எல்லோரும் வாக்களிக்கப் போக வேண்டும்.
  2. ஒரு தொகுதிக்கான வேட்பாளர்களில், கட்சி பற்றி கவலைப்படாமல், உள்ளதிலேயே சிறந்தவருக்கு வாக்களிக்க வேண்டும்.
  3. எக்கச்சக்கமாக செலவு செய்யாமல், விதிமுறைகளுக்குள்ளாக செலவு செய்பவருக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும்.
  4. ஒருவர் எந்த வகையிலாவது குற்றங்களில் ஈடுபட்டிருந்தால் (குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும் கூட) அவருக்கு வாக்களிக்கக் கூடாது.
  5. தேர்தல் விதிகளை மாற்ற விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு மட்டும்தான் வாக்களிக்க வேண்டும் - இந்த விதிமாற்றமானது ஒருவரது சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை கால வரையறுப்பது.

எல்லாம் நல்ல கருத்துகள்தான்.

கல்கி 9/11/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 3

No comments:

Post a Comment