Friday, November 21, 2003

ஜெயலலிதா பதவி விலக வேண்டுமா?

உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகளை கர்நாடக மாநிலத்திற்கு மாற்றக் கூறிய தீர்ப்புக்குப் பின்னர் இரண்டு நாட்கள் கழித்து யார் யார் என்ன சொல்கிறார்கள்?

SM கிருஷ்ணா, முதலமைச்சர், கர்நாடகம்: நான் இன்னமும் தீர்ப்பைப் படிக்கவில்லை. அதைப் படித்து விட்டு, தலைமைச் செயலாளர், சட்டத்துறைச் செயலாளர், அட்வகேட் ஜெனரல் ஆகியோருடன் பேசி விட்டுத்தான் கருத்து சொல்ல முடியும். தனி நீதிமன்றம் அமைக்க முடியும்.

கருணாநிதி, மற்றும் இதர எதிர்க்கட்சித் தலைவர்கள்: ஜெயலலிதா பதவி விலக வேண்டும். இனியும் இவர் பதவியில் நீடிப்பது சரியல்ல.

சுப்ரமணியம் சுவாமி: கர்நாடகா என்னைப் 'பிராசிக்யூட்டராக' நியமிக்கட்டும். செலவு மிச்சம். (இந்தாளுக்கு நெசமாலுமே புத்தி ஜாஸ்தி)

ஜெயலலிதா ஒன்றும் 'நேர்மை' போன்ற தவறான கருத்துகளால் பதவி விலகக் கூடியவர் அல்ல. அவரது கட்சியில் இம்மாதிரி விஷயங்களைப் பேசும் அளவிற்கு யாருக்கும் துணிச்சல், புத்திக் கூர்மை மற்றும் நியாய உணர்ச்சிகள் ஆகியவை கிடையாது. இதே இடத்தில் மற்ற எதிர்க்கட்சி ஆசாமிகள் இருந்தாலும் அவர்களும் நீதி, நேர்மை, நியாயம் என்றெல்லாம் சொல்லிப் பதவியைத் துறந்தது கிடையாது. அந்தக் காலமெல்லாம் போயிற்று. சட்டப்படி ஜெயலலிதா பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை. மனசாட்சி, நேர்மை ஆகியவை அரசியலில் இப்பொழுதைக்கு இல்லாதபடியால் எதிர்க்கட்சித் தலைவர்கள் வாயைப் பொத்திக் கொண்டு தனி நீதிமன்றத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கட்டும்.

No comments:

Post a Comment