Sunday, November 16, 2003

முந்துகிறது ஆந்திரம், பிந்துகிறது தமிழகம்

துக்ளக் 19/11/2003 இதழில் இண்டஸ்டிரியல் எகானமிஸ்டு என்னும் பத்திரிகையின் ஆசிரியர் எஸ்.விஸ்வநாதன் மேற்கண்ட தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இதன் இரண்டாம் மற்றும் நிறைவு பகுதி அடுத்த இதழில் வரும். இதில் எப்படி சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வரான பின்னர் ஆந்திரப்பிரதேசத்தை தமிழகத்தோடு ஒப்பிடுகையில் முன்னுக்குக் கொண்டுவந்துள்ளார் என்று விளக்குகிறார்.

முக்கியமாக மூன்று துறைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். 1995இல் ஆந்திரா தமிழகத்தை விட இத்துறைகளில் பின்தங்கியிருந்ததாம். இப்பொழுது வெகு முன்னே.

ஆந்திரம்தமிழ்நாடு
2002-03 ஆண்டுக்கான மொத்த வருமானம் (கோடி ரூபாய்கள்)35,35330,188
2002-03 திட்ட முதலீடு (கோடி ரூபாய்கள்)10,1005,750
மின்சார உற்பத்தித் திறன் (31 ஜனவரி 2003 அன்று, மெகாவாட்டில்)9,4679,291


1966-67 ஆண்டிலிருந்து 2001-02 வரையில் ஆந்திர மாநிலத்தின் உணவு உற்பத்தி 77 லட்சம் டன்களிலிருந்து 148 லட்சம் டன்களாக உயர்ந்துள்ளது. தமிழ் நாட்டில் இதுவே 58 லட்சம் டன்களிலிருந்து 85 லட்சம் டன்களாக உயர்ந்துள்ளது. (அதாவது ஆந்திரா 92% அதிகரித்துள்ளது, தமிழ் நாடு வெறும் 46.5% தான். பஞ்சாப் இதே நேரத்தில் 490% அதிகரித்துள்ளது)

மொத்தத்தில், மற்றவர்கள் உழைக்கும்போது தமிழகத்தின் அரசியல் கட்சிகளும், தலைவர்களும் வீண்சண்டை போட்டுக் கொண்டு தங்கள் வயிற்றை மட்டும் வளர்த்துக் கொண்டுள்ளனர். அண்ணாதுரை முதல் ஆரம்பித்து ஜெயலலிதா வரையிலான அத்தனை முதலமைச்சர்களும் தமிழகத்துக்கு சரியான தலைமையைக் கொடுக்கவில்லை. முன்னணியில் இருந்த ஒரு மாநிலத்தைப் பின்னுக்குத் தள்ளியுள்ளனர்.

இந்தக் கட்டுரை இணையத்தில் இல்லை. ஆனால் இதே ஆசிரியர் எழுதியுள்ள மற்றுமொரு கட்டுரை 'தி ஹிந்து'வில் முன்னர் வந்துள்ளது.

இனியும் வெட்டிச் சண்டைகளை விடுத்து, பழிவாங்கலை மறந்து, ஜெயலலிதா வளர்ச்சிப் பணிகளில் மாநிலத்தைச் செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment