இன்று GK வாசன் தமிழக காங்கிரஸ் தலைவராகப் பதவியேற்கிறார். கத்திப்பாரா சந்திப்பில் நேருவுக்கு மாலையிட வருகிறாராம். அந்தப் பக்கமாகப் போகவேண்டிய வாய்ப்பு வந்தது. தெருவோரத்தில் பலர் நாதசுரம் முழங்கிக் கொண்டிருந்தனர் (அபஸ்வரம்தான்). இரண்டு கலைஞர்கள் முகத்தில் சந்தோஷத்துடன் பொய்க்கால் குதிரை ஆடிக்கொண்டிருந்தனர். மொத்தமாக 25 பேர்கள் இருப்பர். நான்கு காவலர்கள் அந்த (மாபெரும்) கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர்.
தெருவெங்கும் சுவரொட்டிகள். தினமலரில் இன்று பல விளம்பரங்கள். ஒரே மகிழ்ச்சியும், கும்மாளமும்.
அதற்குள் சோ.பாலகிருஷ்ணனும், EVKS இளங்கோவனும் தங்களது ஆதரவாளர்களுடன் எந்த விதத்தில் கோஷ்டிப் பூசலை அதிகரிக்கலாம் என்று கலந்தாலோசித்துள்ளனராம். இன்றைய 'பதவி ஏற்பு விழா'வினைப் புறக்கணிக்கப் போகிறார்களாம்.
எப்பொழுதுதான் இந்தக் குழு கூட்டி, குழி பறிப்பதை விடுத்து ஒழுங்காக ஒரு தலைமையில் ஒன்றினைந்து போராடப் போகிறார்கள் இவர்கள். புத்தி வரவே வராதா?
அழகியலும் புதுமைப்பித்தனும்
8 hours ago

No comments:
Post a Comment